states

img

உ.பி. யில் பாதி எரிந்த நிலையில் கல்லூரி மாணவி மீட்பு.

உத்திரப் பிரதேசத்தில் , நெடுஞ்சாலை அருகே பாதி எரிந்த நிலையில்  கல்லூரி மாணவியை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

உத்திரப் பிரதேசம், நாகரியா கிராசிங் நெடுஞ்சாலை அருகே பாதி எரிந்த நிலையில் இருந்த கல்லூரி மாணவியை உயிருடன் காவல்துறையினர் மீட்டனர்.

இது தொடர்பாக ஷாஜகான்பூர் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஆனந்த் கூறுகையில் 
20 வயது தக்க அந்த இளம் பெண் , சுவாமி சுகதேவானந்த் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி என்று கண்டறியப்பட்டுள்ளது. மாணவி உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். தற்போது மேல் சிகிச்சைக்காக லக்கெனள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மாணவி கொடுத்த தொலைபேசி எண் மூலம் அவளின் தந்தைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தற்போது மாணவி சிகிச்சையில் இருப்பதால், அவளால் சரியான தகவல் அளிக்கமுடியவில்லை. மேலும், கல்லூரி நண்பர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் மாணவியின் தந்தை கூறியதாவது : வழக்கம்போல் நேற்று மதியம்  கல்லூரியில் இருந்து அழைத்துச் செல்ல வந்தபோது, தன்னுடைய மகள் கல்லூரியில் இல்லை. வெகு நேரம் காத்திருந்த போதும் அவள் வராததால் தேட ஆரம்பித்தோம் என்று கூறினார். எப்படி இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.
 

;